உத்வேகம்

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்!

அது ஒரு நாளில் ஒரு ஒற்றை தும்மலுடன் தொடங்கியது. நிச்சயமாக, ஒரு தும்மல் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடாது. ஆனால் 15-20 நிமிடங்களுக்கு தொடர்ந்து தும்மிக் கொண்டிருந்தால் அது உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். மேலும் நீங்கள் சோர்ந்து போகும் வரை அவை நீடித்தால், உங்கள் வாழ்க்கை மறுபடியும் பழைய மாதிரி இருக்காது.

ஆரம்பத்தில் அது வெறுமனே ஒரு சாதாரண ஜலதோஷம் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு எனக்கு தொடர் தும்மல் நாள் முழுவதும் நீடிக்கத் தொடங்கியது. முதலில், ஒரு உரையாடலுக்கு நடுவே நான் ஒவ்வொரு தடவை தும்மும் போதும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் துரதிர்ஷ்ட சகுனத்தை நான் வெளிப்படுத்துவதாக கேலி செய்வார்கள். நான் கூட சிறிது காலம் சிரித்து வந்தேன்.

ஆனால் அதன் பிறகு, வேடிக்கையாக இருப்பது நின்றது. மூட நம்பிக்கை மிக ஆழமாக இருந்தது மற்றும் எனக்கு தும்மல்களும் மிக அடிக்கடி ஏற்பட்டன. துரதிர்ஷ்டம் போன்ற வார்த்தைகள், எனது காதுகளில் ஒவ்வொரு தடவையும் கொட்டியது. மேலும் தொடர்ச்சியான தும்மலால் எனக்கு நெஞ்சில் உண்டான வலியை விட அது என்னை அதிகமாக காயப்படுத்தியது.

தும்முவது கூட நோயின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு தொடர்ச்சியாக மூக்கு ஒழுக்கு மற்றும் கண்களில் தண்ணீர் தழும்பியதும் இருந்தது. கடைசியாக நான் ஒரு மருத்துவரிடம் செல்ல, அவர் எனக்குள்ள நிலை ஒவ்வாமையால் வரும் ரினிடிஸ் என்று அழைக்கப்படுவதாக விளக்கினார். இது எனக்கு முதலில் பயத்தை ஏற்படுத்தியது. நான் சிகிச்சை மற்றும் மருந்தளிப்பு எடுக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. மற்றும் இப்போது எனக்குள்ள ஒவ்வாமை ரினிடிஸ் முற்றிலும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

நான் அதிர்ஷ்டத்தை, குறிப்பாக ஒரு துரதிர்ஷ்டக்காரனாக, ஒருபோதும் நம்பியதில்லை. ஆனால் எனக்கிருந்த நிலைக்கு சரியான நோயை கண்டறிய மருத்துவர் எனக்கு உதவியது எனது நல்ல அதிர்ஷ்டம் என நான் நினைக்கிறேன். என்னை போன்ற ஒரு நிலை உள்ள மற்றவர்களுக்கும் அதே மாதிரி நடக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றும், என்னைப் போலவே அவர்களும் கிட்டத்தட்ட ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்; இதனால் அவர்களின் தும்மல்களுக்கு பதிலாக புன்சிரிப்புகள் இடம்பெறும்.

Please Select Your Preferred Language